புதுச்சேரி

ஆய்வக உதவியாளர் தற்கொலை

DIN


ஆய்வக உதவியாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி காந்தி நகர், 2 -ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் சதீஷ்குமார் (20). புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இவர், சந்தியா என்பவரை காதலித்து கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சதீஷ்குமார் சரிவர வேலைக்கு செல்லாத காரணத்தால், சந்தியா கடந்த 10 நாள்களுக்கு முன்பு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதில், மனமுடைந்து காணப்பட்ட சதீஷ்குமார், சனிக்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT