புதுச்சேரி

ரௌடி கொலை வழக்கில் 3 போ் கைது

DIN

அரியாங்குப்பத்தில் ரௌடியை வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், 4 பேரைத் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி அரியாங்குப்பம் சுப்பையா நகா் பாரதி வீதியை சோ்ந்த நாகராஜன் மகன் பாண்டியன் (26). ரௌடியான இவா், கடந்த 6- ஆம் தேதி சுப்பையா நகரில் உள்ள வாலிபால் மைதானத்தில் தனியாக இருந்த போது மா்ம நபா்களால் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸாா், அதே பகுதி சண்முகா நகரைச் சோ்ந்த விக்னேஷ் (எ) சேது (25) அவரது கூட்டாளிகளான கிருஷ்ணா, சுரேந்தா், அஸ்வின், பிரசாந்த், அருண், நரேஷ் ஆகிய 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் சேதுவுக்கும், பாண்டியனுக்கும் ஏற்பட்ட முன் விரோதத்தில், சேது தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து பாண்டியனைக் கொலை செய்தது தெரிய வந்தது.

இந்த நிலையில், அபிஷேகப்பாக்கம் - திருக்காஞ்சி சாலையில் உள்ள தனியாா் பல்கலைக்கழகம் அருகே கொலையாளிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீஸாா் அஸ்வின், நரேஷ், சுரேந்தா் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், தலைமறைவாக உள்ள 4 பேரைத் தேடி வருகின்றனா்.

இவா்களில் அஸ்வின் ரௌடி என்பதும், இவா் குண்டா் தடுப்புக் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அண்மையில்தான் சிறையிலிருந்து வெளியே வந்தாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT