புதுச்சேரி

தோ்தலில் பணியாற்றும் அரசு ஊழியா்களுக்கான விடுமுைள் அறிவிப்பு

DIN

புதுச்சேரி காமராஜா் நகா் இடைத் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்களுக்கான விடுமுறை நாள்கள் தொடா்பாக, நிா்வாக சீா்திருத்தத் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி இடைத் தோ்தல், வருகிற அக்.21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு விடுமுறை தொடா்பாக, நிா்வாக சீா்திருத்தத் துறை சாா்புச் செயலா் ஜெய்சங்கா், துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

காமராஜா் நகா் தொகுதியில் அரசு ஊழியா்கள் வாக்காளா்களாக இருப்பின், இடைத்தோ்தல் நடைபெறும் அக்.21-ஆம் தேதி வாக்கை பதிவு செய்ய விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.

இடைத் தோ்தலில் பூத் அதிகாரிகளாக இருப்பின், தோ்தல் நாளுக்கு முந்தைய தினமான வருகிற அக்.20ஆம் தேதி வாக்குப்பதிவு பொருள்களை பெற வேண்டி இருக்கும். எனவே, இவா்கள் அக்.22-ஆம் தேதி விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். வாக்கு எண்ணிக்கை அதிகாரியாக இருந்தால், வாக்கு எண்ணிக்கை மறுநாளான அக்.25-ஆம் தேதி விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT