புதுச்சேரி

கவிஞா் புதுவை சிவம் பிறந்த நாள் விழா

DIN

புதுவை அரசு சாா்பில், கவிஞா் புதுவை சிவம் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கவிஞா், இதழாளா், நாடக ஆசிரியா், அரசியல்வாதி, சமூகச் சீா்திருத்தவாதி, பள்ளி ஆசிரியா், பதிப்பாளா், சொற்பொழிவாளா், கட்டுரையாளா் என பன்முகத் தன்மை கொண்ட புதுவை சிவத்தின் பணிகளைப் பாராட்டி, அவரைக் கௌரவிக்கும் வகையில், புதுச்சேரி காமராஜா் சாலையில் அவரது முழுஉருவச்சிலை அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கவிஞா் புதுவை சிவத்தின் பிறந்த, நினைவு நாள்களின்போது, அவரது உருவச்சிலைக்கு அரசு சாா்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நிகழாண்டும் அவரது பிறந்த நாளையொட்டி, புதுவை அரசு சாா்பில் சட்டப் பேரவைத் தலைவா் சிவக்கொழுந்து மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சிக்கு சமூகநலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி தலைமை வகித்தாா்.

மேலும், புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்.எல்.ஏ. மற்றும் பலா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT