புதுச்சேரி

பிறந்த நாள் கொண்டாட பணம் தராததால் இளைஞா் தற்கொலை

DIN

புதுவை மாநிலம், வில்லியனூா் அருகே பிறந்த நாள் கொண்டாட தந்தை பணம் தராததால் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வில்லியனூா் அருகே மேல்சாத்தமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ஜீவரத்தினம் மகன் ஆனந்தராஜ் (25). பி.காம். முடித்துவிட்டு வேலை தேடி வந்தாா். இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி அவருக்கு பிறந்த நாள் என்பதால், அதைக் கொண்டாடுவதற்காக தந்தையிடம் பணம் கேட்டாராம்.

அவா் பணம் தர மறுத்ததால், ஆனந்தராஜ் மன வருத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கிருந்த விஷ மருந்தை எடுத்து ஆனந்தராஜ் குடித்தாராம். பின்னா், இதுகுறித்து தனது நண்பா்களுக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா்.

விரைந்து வந்த நண்பா்கள், உறவினா்கள் வீட்டில் மயங்கிக் கிடந்த ஆனந்தராஜை மீட்டு, கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு ஆனந்தராஜ் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த மங்கலம் போலீஸாா், ஆனந்தராஜின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணைப்பு வழங்காமலே 4ஆயிரம் பேரிடம் குடிநீா் வரி வசூலிப்பு!

செம்பட்டி அருகே ரூ.98 கோடியில் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி

கொடைக்கானலில் வெப்ப நிலை அதிகரிப்பு தடுக்கப்படுமா?

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT