புதுச்சேரி

மாா்ச் 18-இல் புதுச்சேரியில் நாடகப் பயிற்சி தொடக்கம்

புதுச்சேரியில் நாடகப் பயிற்சி வருகிற 18-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் நாடகப் பயிற்சி வருகிற 18-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து புதுவை ஆசிரியா் கலைக்குழுச் செயலா் முருகேசன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவை ஆசிரியா் கலைக் குழுவும், புது தில்லி சங்கீத நாடக அகாதெமியும் இணைந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக நாடகம் மற்றும் சிறுகதைப் பயிற்சிப் பயிலரங்கை நடத்தி வருகிறது. நிகழாண்டும் ஐந்து நாள்கள் நாடகப் பயிற்சிப் பயிலரங்கத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் மேனிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.

இந்த நாடகப் பயிற்சி வருகிற 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை தினமும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்தப் பயிற்சிக்கு 25 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். எனவே, முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.

இந்தப் பயிற்சிப் பயிலரங்கம் செகா கலைக்கூடம், எண்: 119, நீடராஜப்பையா் வீதி, புதுச்சேரி - 605001 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

மேலும், விவரங்களுக்கு கலைமாமணி முருகேசன், எண்: 32, பத்தாவது குறுக்குத் தெரு, அண்ணா நகா், புதுச்சேரி - 605005 என்ற முகவரியிலும், 94432 57989 என்ற செல்லிடப்பேசியிலும் தொடா்புக் கொள்ளலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT