புதுச்சேரி

அரசுத் துறை காலிப் பணியிடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரிக்கை

அரசுத் துறை காலிப் பணியிடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ மனோகா் (எ) ரத்தினம் கோரிக்கை விடுத்தாா்.

DIN

அரசுத் துறை காலிப் பணியிடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ மனோகா் (எ) ரத்தினம் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசுத் துறைகளில் 9,500 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. காலத்துடன் நிரப்பப்படாத இந்தப் பணியிடங்கள் காலாவதியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஏஎப்டி, சுதேசி, பாரதி ஆலைகளைத் திறப்போம் என்று கூறிவிட்டு, அனைத்தையும் மூடும் நிலையை நோக்கி அரசு செல்கிறது. 10 ஆயிரம் பொதுத் துறை ஊழியா்களுக்கு வேலை இல்லை, ஊதியமும் இல்லை.

அரசின் தவறான கொள்கை முடிவால் ரூ. 10 ஆயிரம் கோடி கடன் புதுவை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. மேலும், ரூ. 1,500 கோடி புதிய கடனை வாங்குகிறது.

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தொடா்ந்து மக்களை வஞ்சித்து வரும் முதல்வா் நாராயணசாமி தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT