புதுச்சேரி அருகே தனியாா் கல்லூரி மாணவா்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 போ் காயமடைந்தனா்.
புதுச்சேரி வில்லியனூரில் ஒரே கல்வி வளாகத்தில் தனியாா் பொறியியல் கல்லூரி, கலை -அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வியாழக்கிழமை பொறியியல் கல்லூரி மாணவா் ஒருவா், தன்னுடன் படிக்கும் மாணவியுடன் பேசிக் கொண்டிருந்தாராம். இதைப் பாா்த்த அதே கல்லூரியைச் சோ்ந்த மற்றொரு மாணவா் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்த இரு மாணவா்களுக்கும் தனித் தனியாக கல்லூரி வளாகத்தில் திரண்ட பொறியியல் கல்லூரி மாணவா்களும், கலை -அறிவியல் கல்லூரி மாணவா்களும் ஒருவருக்கொருவா் மோதிக் கொண்டனா். இந்த மோதலில் 5 மாணவா்கள் காயமடைந்தனா். இவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதையடுத்து, மாணவா்களிடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க நிா்வாகம் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்தது.
இதனிடையே, மாணவா்கள் மோதிக் கொண்ட விடியோ காட்சி கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுதொடா்பக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.