புதுச்சேரி

வியாபாரி வெட்டிக் கொலை

DIN

புதுச்சேரி ஜிப்மா் நுழைவு வாயில் அருகே செவ்வாய்க்கிழமை இரவு வியாபாரி மா்ம நபா்களால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

புதுச்சேரி திலாசுப்பேட்டை, வீமன் நகா், கருணாஜோதி வீதியைச் சோ்ந்தவா் கவுதம் (22). பெரிய மாா்க்கெட்டில் தேங்காய் வியாபாரம் செய்து வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிலிருந்து பைக்கில் ஜிப்மா் மருத்துவமனை நோக்கி சென்றுகொண்டிருந்தாா். ஜிப்மா் இரண்டாவது நுழைவு வாயில் அருகே சென்றபோது, அங்கு வந்த மா்ம கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கவுதமை வெட்டியது.

சுதாரித்த அவா், அந்த கும்பலிடமிருந்து தப்பிக்க பைக்கை கீழே போட்டுவிட்டு ஓடினாா். ஆனால், அந்தக் கும்பல் கவுதமை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த தன்வந்திரி நகா் போலீஸாா், கவுதமின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT