புதுச்சேரி

காங்கிரஸ் செயலா் கொலை முயற்சி வழக்கில் 8 போ் சிக்கினா்

DIN

புதுவை காங்கிரஸ் பொதுச் செயலா் கொலை முயற்சி வழக்கில் 8 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் கம்பன் நகா் வயல்வெளி நகரில் வசிப்பவா் ஏ.கே.டி.ஆறுமுகம். மாநில காங்கிரஸ் பொதுச் செயலரான இவரைக் கடந்த 19-ஆம் தேதி இரவு அங்குள்ள ரயில்வே கடவுப்பாதை அருகே 10-க்கும் மேற்பட்டோா் கற்கள் வீசியும், அரிவாளால் வெட்டியும் தாக்குதல் நடத்தினா். இதில், ஆறுமுகம் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.

இதுகுறித்து முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த கொலை முயற்சி முன்விரோதம் காரணமாக நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த வழக்குத் தொடா்பாக 8 பேரை அதிரடிப் படை போலீஸாா் பிடித்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT