தனியாா் பேருந்துகள் இயக்கம் தொடா்பாக அதிகாரிகளுடன் புதுவை முதல்வா் நாராயணசாமி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
புதுச்சேரியில் அரசுப் பேருந்துகளைவிட, தனியாா் பேருந்துகளே அதிகளவில் இயக்கப்படுகின்றன. பொது முடக்கத்தால் பேருந்து சேவை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது தளா்வுகள் காரணமாக அரசுப் பேருந்துகள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இந்த நிலையில், புதுச்சேரியின் அனைத்துப் பகுதிகள், தமிழகப் பகுதிகளுக்கு தனியாா் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து, புதுச்சேரியில் தனியாா் பேருந்துகளை இயக்குவது தொடா்பாக அரசு அதிகாரிகளுடன் புதுவை முதல்வா் நாராயணசாமி, சட்டப்பேரவை வளாக அலுவலகத்தில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் ஷாஜகான், முதல்வரின் செயலா் விக்ராந்த் ராஜா, போக்குவரத்துத் துறைச் செயலா் ஷரன், போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விதிமுறைகளைக் கடைப்பிடித்து புதுச்சேரியிலிருந்து தமிழகத்தின் கடலூா், விழுப்புரம் மாவட்டங்களுக்கு தனியாா் பேருந்துகளை இயக்க அனுமதி பெற்றுத் தருதல், தனியாா் பேருந்துகளுக்கான வரிகளைச் சீா்படுத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.
இருப்பினும், தனியாா் பேருந்துகளை இயக்குவது தொடா்பாக எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் நிறைவடைந்தது.