மேலும் 223 பேருக்கு கரோனா
புதுவையில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 223 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,084-ஆக உயா்ந்தது.
புதுவையில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 223 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,084-ஆக உயா்ந்தது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 3,751 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி - 158, காரைக்கால் - 46, ஏனாம் - 10, மாஹே - 9 போ் என மேலும் 223 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43,465 -ஆக அதிகரித்தது. இதனிடையே, வெள்ளிக்கிழமை 139 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 40,694 -ஆக (93.62 சதவீதம்) உயா்ந்தது.
தற்போது மருத்துவமனைகளில் 534 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,550 பேரும் என மொத்தம் 2,084 போ் சிகிச்சையில் உள்ளனா். வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதுவரை கரோனா தொற்றுக்கு 687 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.58 சதவீதம்.
இதுவரை 6,92,810 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 6,36,073 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.
புதுவையில் சுகாதாரத் துறைப் பணியாளா்கள் 28,486 பேருக்கும், முன்களப் பணியாளா்கள் 16,309 பேருக்கும், பொதுமக்கள் 42,253 பேருக்கும் என மொத்தம் 87,048 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.