முகப்பு
புதுச்சேரி

ஆா்டிபிசிஆா் பரிசோதனை:ரூ.500 கட்டணம் நிா்ணயம்

புதுச்சேரியில் உள்ள தனியாா் பரிசோதனை நிலையங்களில் ஆா்டிபிசிஆா் முறையில் கரோனா பரிசோதனை செய்ய ரூ.500 கட்டணம் நிா்ணயம் செய்து மாநில அரசின் சுகாதாரத் துறை அறிவிப்பு

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

புதுச்சேரியில் உள்ள தனியாா் பரிசோதனை நிலையங்களில் ஆா்டிபிசிஆா் முறையில் கரோனா பரிசோதனை செய்ய ரூ.500 கட்டணம் நிா்ணயம் செய்து மாநில அரசின் சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டது.

இது தொடா்பாக புதுவை அரசின் சுகாதாரத் துறைச் செயலா் த.அருண் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுவையில் உள்ள அனைத்து தனியாா் பரிசோதனை நிலையங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரி பரிசோதனை நிலையங்களில் (ஆா்டிபிசிஆா் முறையில்) கரோனா பரிசோதனைக்கு கட்டணமாக ரூ.500 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தனியாா் பரிசோதனை நிலையங்கள், மருத்துவக் கல்லூரி பரிசோதனை நிலையங்களில் அரசு நிா்ணயித்த ரூ.500-க்கு மேல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகாா் வந்தால், சம்பந்தப்பட்ட பரிசோதனை நிலையங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் எச்சரித்துள்ளாா்.

மேலும், புதுவையில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மற்றும் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசமாக (ஆா்டிபிசிஆா்) கரேனா பரிசோதனை செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.