முகப்பு
புதுச்சேரி

புதுவை இந்தியாவுடன் இணைக்கப்பட்ட நாள் விழா: கீழூர் நினைவிடத்தில் மரியாதை

புதுவை இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் சட்டப்பூர்வ அதிகாரப் பரிமாற்ற நாள் இன்று கொண்டாடப்பட்டது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
புதுச்சேரி கீழூர் தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பேரவைத் தலைவர் ஆர் செல்வம், அமைச்சர் தேனி ஜெயக்குமார் உள்ளிட்டோர்.
பகிர்:

புதுவை இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் சட்டப்பூர்வ அதிகாரப் பரிமாற்ற நாள் இன்று கொண்டாடப்பட்டது. 

பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி, கடந்த 1962-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. இந்ததினத்தை சட்டபூர்வ பரிமாற்ற தினமாக புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி நிகழாண்டு திங்கள்கிழமை சட்டப்பூர்வ பரிமாறி நாள் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி அருகே கீழூர் தியாகிகள் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவை மாநில வேளாண் அமைச்சர் தேனி C. ஜெயக்குமார் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். 

புதுவை சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம் கீழூர் நினைவு தூணில் தூவி மரியாதை செலுத்தினார். உடன்,  சட்டமன்ற உறுப்பினர்கள் P.V.ஆறுமுகம், KSP.ரமேஷ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், தியாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் முடிவில் தியாகிகள் கௌரவிக்கப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →