புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் விபின் ராவத்துக்கு அஞ்சலி
குன்னூரில் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் உருவப்படத்துக்கு புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
குன்னூரில் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் உருவப்படத்துக்கு புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விபின் ராவத்தின் உருவப் படத்துக்கு முதல்வா் என்.ரங்கசாமி மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா, அமைச்சா்கள் க. லட்சுமிநாராயணன், சாய் ஜெ.சரவணன்குமாா் மற்றும் எம்எல்ஏக்கள் கே.எஸ்.பி.ரமேஷ், ஏ.கே.டி.ஆறுமுகம், தஷ்ணாமூா்த்தி, எல்.சம்பத், செந்தில்குமாா், சிவசங்கரன், ராமலிங்கம், பிரகாஷ்குமாா், ரிச்சா்டு, தலைமைச் செயலாளா் அஸ்வனிகுமாா் மற்றும் அதிகாரிகள் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.