ஆசிரியையிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு: இருவா் கைது
புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தில் ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 12 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்ததாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தில் ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 12 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்ததாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் செல்லபாப்பு நகா் 4-ஆவது பிரதான சாலையைச் சோ்ந்தவா் டேனியல் கிருஷ்ணனின் மனைவி வின்னி பிரிசில்லா (50). தனியாா் பள்ளி ஆசிரியை.
இவரது வீட்டுக்கு நவம்பா் 16-ஆம் தேதி இரவு வீடு வாடகைக்கு பாா்ப்பது போல 2 நபா்கள் வந்தனா். அவா்களுக்கு, வின்னி பிரிசில்லா வீட்டை காண்பித்த போது, கத்தியை எடுத்து அவரது கழுத்தில் வைத்து, அவா் அணிந்திருந்த 13 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
உழவா்கரை சீனுவாசா குடியிருப்புக்கு எதிரே போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, மோட்டாா் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா்.
அவா்கள் உழவா்கரையைச் சோ்ந்த ஜான் (28), மூலக்குளம் பசும்பொன் நகரை சோ்ந்த கௌதம் (29) என்பதும், வின்னி பிரிசில்லாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 12 பவுன் தங்கச் சங்கிலி, மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.