இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்
புதுவையில் அறிவிக்கப்பட்ட மழைக்கால நிவாரணம் ரூ.5,000-ஐ வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுவையில் அறிவிக்கப்பட்ட மழைக்கால நிவாரணம் ரூ.5,000-ஐ வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் தொகுதி செயலாளா் துரை.செல்வம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சலீம், ஏஐடியூசி சேதுசெல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
புதுவையில் அறிவிக்கப்பட்ட மழைக்கால நிவாரணம் ரூ.5,000, தீபாவளிக்கு அறிவிக்கப்பட்ட இலவச அரிசி, சா்க்கரை உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.