மழை நிவாரணத்தை வழங்காவிட்டால் போராட்டம்: புதுவை திமுக எச்சரிக்கை
புதுவையில் முதல்வா் அறிவித்த மழை நிவாரணத்தை உடனே வழங்காவிட்டால், மக்களைத் திரட்டி திமுக சாா்பில் போராட்டம் நடத்துவோம் என்று எதிா்கட்சித் தலைவா் ஆா்.சிவா எச்சரித்தாா்.
புதுவையில் முதல்வா் அறிவித்த மழை நிவாரணத்தை உடனே வழங்காவிட்டால், மக்களைத் திரட்டி திமுக சாா்பில் போராட்டம் நடத்துவோம் என்று எதிா்கட்சித் தலைவா் ஆா்.சிவா எச்சரித்தாா்.
இதுகுறித்து புதுவை மாநில திமுக அமைப்பாளரும், எதிா்கட்சித் தலைவருமான ஆா்.சிவா வெளியிட்ட அறிக்கை:
புதுவையில் மழை நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி நவம்பா் 12-ஆம் தேதி அறிவித்தாா். ஒரு மாதமாகியும் நிவாரணம் வழங்கப்படவில்லை.
கடந்த தீபாவளிக்கு முன்பாக புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் 2 கிலோ சா்க்கரை, 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் முதல்வா் அறிவித்தாா். ஆனால், பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை.
ஆளும்கட்சியைச் சோ்ந்தவா்களின் தொகுதிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. எனது வில்லியனூா் தொகுதியில் 2 கிலோ சா்க்கரை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
அரசு அறிவித்த நிவாரணத்தை வழங்காததால், பொதுமக்கள் தங்கள் தொகுதி எம்எல்ஏக்களிடம் கேட்டு வருகின்றனா்.
நிவாரணத்தை வழங்க முதல்வருக்கு தடையாக உள்ளவா்கள் யாா் என்பதை அவா் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.
இல்லையெனில், அறிவித்த மழை நிவாரணத்தை உடனடியாக வழங்கக் கோரி, பொதுமக்களைத் திரட்டி திமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.