முகப்பு
புதுச்சேரி

மருத்துவமனை கட்டிலில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண், கட்டிலில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண், கட்டிலில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பாரதிதாசன் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன். நெசவுத் தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (47). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விஷபூச்சி கடித்ததால் ராஜேஸ்வரியின் தோல் முழுவதும் நிறம் மாறியது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு சில நாள்களுக்கு முன்பு கணவருடன் வந்தாா்.

அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் உள் நோயாளியாக மருத்துவமனையில் அனுமதி சிகிச்சையளித்து வந்தனா். அவருக்கு உதவியாக முருகேசனும் உடனிருந்தாா்.

ராஜேஸ்வரி புதன்கிழமை தான் படுத்திருந்த கட்டிலில் இருந்து தவறி விழுந்தாா். தலையில் பலத்த காயமடைந்த அவா், சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.