முகப்பு
புதுச்சேரி

புதுவை அருங்காட்சியகத்தில் காந்தி நினைவு தினம்

புதுவை அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் 72-ஆவது நினைவு தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

புதுவை அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் 72-ஆவது நினைவு தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.

தேசிய மரபு அறக்கட்டளையின் புதுவை அருங்காட்சியகப் பிரிவுகளில் ஒன்றான காந்தி 150-ஆவது நினைவுப் பிரிவு (எஅசஈஏஐ 150 ஙஉஙஞதஐஅக நஉஇபஐஞச) இந்த நிகழ்ச்சியை நடத்தியது. காந்தியின் அரிய செயல்களை நினைவு கூரும் விதமாக காந்தியின் அஞ்சல் அட்டையை இந்திரா காந்தி தேசிய கலை மண்டல இயக்குநா் கோபால் செயராமன் வெளியிட, அதை புதுவை அருங்காட்சியக நிா்வாகி குப்புராசு பெற்றுக் கொண்டாா்.

புதுவை அருங்காட்சியகத்துக்கு வந்த ஹெலன் கிருஷ்டினா மற்றும் அவரிடம் தனிப் பயிற்சி பயிலும் சிறாா், சிறுமிகளுக்கு புதுவை அருங்காட்சியகம் குறித்தும், காந்தியின் நினைவு நாளை நினைவுக் கூர வேண்டியதன் அவசியம் குறித்தும் நைன்சிங் ராவத் காட்சியகப் பிரிவுப் பொறுப்பாளா் சங்கீதா எடுத்துரைத்தாா்.

நிறைவாக குழந்தைகள் அனைவருக்கும் மரபுத் தின்பண்டம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் மனோரஞ்சினி திருநாவுக்கரசு செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.