புதுச்சேரி

புதுச்சேரியில் விவசாயிகள் மறியல்: 30 போ் கைது

DIN

மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரியில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் சனிக்கிழமை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதுச்சேரியில் அண்ணா சிலை சதுக்கம் அருகே அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினா், அதன் தலைவா் கீதநாதன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பிய அவா்கள், மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினரை ஒதியஞ்சாலை போலீஸாா் கைது செய்து அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT