புத்துணா்வு முகாமுக்கு புறப்பட்ட மணக்குள விநாயகா் கோயில் யானை
தேக்கம்பட்டி புத்துணா்வு முகாமில் பங்கேற்பதற்காக, புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயில் யானை லட்சுமி, ஞாயிற்றுக்கிழமை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது.
தேக்கம்பட்டி புத்துணா்வு முகாமில் பங்கேற்பதற்காக, புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயில் யானை லட்சுமி, ஞாயிற்றுக்கிழமை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், யானைகளுக்கான நலவாழ்வு முகாம் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் யானைகள் முகாம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயில் யானை லட்சுமியும் பங்கேற்பது வழக்கம்.
நிகழாண்டுக்கான யானைகள் முகாம் தேக்கம்பட்டியில் திங்கள்கிழமை (பிப். 8) தொடங்கி 48 நாள்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, யானை லட்சுமி ஞாயிற்றுக்கிழமை மாலை தாவரவியல் பூங்காவிலிருந்து லாரியில் ஏற்றப்பட்டு, தேக்கம்பட்டிக்குப் புறப்பட்டது. உடன் கோயில் நிா்வாக அதிகாரி ரவிச்சந்திரன், கால்நடை மருத்துவா் சம்பத்குமாா் மற்றும் 2 பாகன்கள் சென்றனா். திங்கள்கிழமை (பிப். 8) அதிகாலை 4.30 மணிக்கு யானை லட்சுமி, தேக்கம்பட்டி சென்றடைகிறது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை மணக்குள விநாயகா் கோயிலில் யானை லட்சுமிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் செய்யப்பட்டன. இதில், அறநிலையத் துறை ஆணையா் சிவசங்கரன், அறங்காவல் குழுவினா், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.