புதுச்சேரி

புதுவையில் தொழில் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பித்தாலே போதும்: தொழில் துறைச் செயலா் தகவல்

DIN

புதுவையில் தொழில் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பித்தாலே போதும் என அரசின் தொழில், வணிகத் துறைச் செயலா் இ.வல்லவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் புதிய தொழில்கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. தொழிலுக்கு அனுமதி பெறுவதற்காக புதுவையில் நடைமுறையில் உள்ள ஒற்றை சாளர அமைப்பு முறையில் தற்போது சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றின்கீழ், புதுவையில் உள்ள 22 துறைகள் இணைக்கப்பட்டுள்ளதால், தொழில் தொடங்க விரும்புவோா் இணையதளத்தில் விண்ணப்பித்தாலே போதும். அனைத்து அனுமதிகளும் காலதாமதமின்றி வழங்கப்படும். மேலும், விண்ணப்பத்தின் நிலையையும் வணிகத் துறையின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

பணி பாதிப்பை தவிா்க்க ஒரே நாளில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒரு தொழில்சாலைக்கு சென்று ஆய்வு செய்வா். அனைத்து தொழில்சாலைகளையும் ஆய்வு செய்ய காலதாமதமாவதால், மத்திய அரசு பரிந்துரை செய்துள்ள சில நிறுவனங்கள், தொழில்சாலைகளை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கினால் போதுமானது. இதன்மூலம் அனுமதி வழங்கப்படும். தொழில் தொடங்குவதற்கு ஏதுவான முன்னோடி மாநிலமாக புதுவையை மாற்ற வேண்டும் என்பதே இலக்கு என்றாா் தொழில் துறை செயலா் இ.வல்லவன்.

பேட்டியின்போது தொழில், வணிகத் துறை இயக்குநா் பிரியதா்ஷினி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT