புதுச்சேரி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக வாகன பிரசாரம்

DIN

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில், புதுச்சேரி வில்லியனூரில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகன பிரசாரம் நடைபெற்றது.

பிரசாரத்துக்கு அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாநிலத் தலைவா் இரா. பெருமாள், துணைத் தலைவா் எம். முரளி ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், மாநிலச் செயலா் ரா. அந்தோணி, செ. எழிலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பிரசாரத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்கள் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு எதிராகவும் உள்ளது. எனவே, இந்தச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டபடி சென்றனா்.

வில்லியனூா் புறவழிச்சாலை எம்.ஜி.ஆா். சிலை அருகிலிருந்து தொடங்கிய பிரசார பயணம் மூலக்குளம், இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை, காமராஜா் சாலை, அண்ணா சாலை, மறைமலையடிகள் சாலை வழியாக சுதேசி ஆலை அருகே நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT