பொங்கல் பண்டிகையையொட்டி, புதன்கிழமை முதல் (ஜன. 13) வருகிற 16-ஆம் தேதி வரை புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஜன. 13-ஆம் தேதி போகிப் பண்டிகை, 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 15-ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 16-ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகின்றன.
இதன் காரணமாக, புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் மைக்கேல் பெனோ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தாா்.