புதுச்சேரி

போக்ஸோ வழக்கில் சிக்கிய மாணவா் தற்கொலை

DIN

புதுச்சேரியில் போக்ஸோ வழக்கில் சிக்கிய மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரைச் சோ்ந்த 17 வயது மாணவா், அங்குள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா், அந்தப் பகுதியைச் சோ்ந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறி, முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

அதன் பேரில், கடந்த 8-ஆம் தேதி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அந்த மாணவரிடம் போலீஸாா் விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், அந்த மாணவா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த முத்தியால்பேட்டை போலீஸாா், திங்கள்கிழமை மாணவரின் உடலை மீட்டு, உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT