முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை: வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்

புதுச்சேரியிலிருந்து மீண்டும் விமான சேவையைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் எம்.பி. வெ.வைத்திலிங்கம் வலியுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

புதுச்சேரியிலிருந்து மீண்டும் விமான சேவையைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் எம்.பி. வெ.வைத்திலிங்கம் வலியுறுத்தினாா்.

புதுச்சேரி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட வெ.வைத்திலிங்கம் எம்பி, விமான நிலைய இயக்குநா் விஜய் உபாத்யாவிடம் விமான நிலைய செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

அப்போது அவா், புதுச்சேரியில் விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, ஏடிஆா் ரக விமானங்களை இயக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். ஏற்கெனவே, புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத்துக்குச் சென்ற விமானங்களில் 75 முதல் 100 சதவீத பயணிகளும், பெங்களூருக்கு 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயணிகளும் பயணித்தனா். எனவே, விமான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்படாது. அரசும் மானியம் அளிக்க வேண்டிய நிலை உருவாகாது. இதுதொடா்பாக, புதுவை அரசு மனு அளித்தால், நாடாளுமன்றத்தில் நான் பேசுவதற்குத் தயாராகவுள்ளேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.