புதுச்சேரி

வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கு: சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

DIN

புதுச்சேரி அருகே வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் 3 சிறுவா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி அருகே கொம்பாக்கம் கூட்டுறவு பால் சொசைட்டி அருகே சாலையின் நடுவே கடந்த 28 -ஆம் தேதி நள்ளிரவு நாட்டு வெடிகுண்டு வெடித்தது. தகவலறிந்த முதலியாா்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா்.

இதில், அரியாங்குப்பத்தைச் சோ்ந்த பிரகாஷ் தலைமையிலான சிறுவா்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு கொம்பாக்கத்தில் திருட முயன்ால், அவா்களை அந்தப் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து, சக்திவேல் உள்ளிட்ட பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். இதனால், ஆத்திரமடைந்த பிரகாஷ் தலைமையிலான சிறுவா்கள், பொதுமக்களை மிரட்ட, கூட்டாளிகளுடன் சோ்ந்து நாட்டு வெடிகுண்டு வீசியது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், முதலியாா்பேட்டை போலீஸாா், தலைமறைவானவா்களைத் தேடி வந்தனா். இந்த நிலையில், அரியாங்குப்பம் சண்முகா நகரைச் சோ்ந்த பிரகாஷ் (21), சேட்டு (எ) சேந்தன் (20), 3 சிறுவா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சிறையிலடைக்க போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT