புதுச்சேரி

மன்னா் மன்னன் அறக்கட்டளை சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

பாரதிதாசனின் மகன் மன்னா் மன்னன் அறக்கட்டளை, காந்தி நகா் மக்கள் நல்வாழ்வுச் சங்கம், மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து நடத்திய கரோனா தடுப்பூசி முகாம் புதுச்சேரி காந்தி நகா் சமுதாய நலக்கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு அறக்கட்டளைத் தலைவா் கோ. பாரதி தலைமை வகித்தாா். ஏகேடி. ஆறுமுகம் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, முகாம் நடத்துவோரை பாராட்டிப் பேசினாா். காந்தி நகா் நல்வாழ்வுச் சங்கத்தினா், முன்னாள் கவுன்சிலா் லலிதா, கோ.ராஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் நளினி, செவிலியா்கள், பணியாளா்கள் பங்கேற்று 292 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா். தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவருக்கும் கோ. பாரதி அரிசி வழங்கினாா். ஏற்பாடுகளை சமூக சேவகா் ஜெ.வள்ளி, ராமகிருஷ்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT