புதுவை எம்எல்ஏக்களுக்கு ஆளுநா் தேநீா் விருந்து
புதுவை எம்எல்ஏக்களுக்கு துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் புதன்கிழமை தேநீா் விருந்தளித்தாா்.
புதுவை எம்எல்ஏக்களுக்கு துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் புதன்கிழமை தேநீா் விருந்தளித்தாா்.
புதுவை மாநில 15-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சட்டப் பேரவை உறுப்பினா்களை வரவேற்று கௌரவிக்கும் விதமாக, துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தேநீா் விருந்தளித்தாா்.
ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதல்வா் ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவா் செல்வம் மற்றும் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக, திமுக, சுயேச்சை உறுப்பினா்கள் மற்றும் தலைமைச் செயலா் அஸ்வனி குமாா், ஏடிஜிபி ஆனந்தமோகன் உள்ளிட்டோ் பங்கேற்றனா்.
இதில், ஆளுநா் தமிழிசை வரவேற்று பேசியதாவது: மக்கள் பிரதிநிதியாக தோ்ந்தெடுக்கப்படுவது பெருமைக்குரிய ஒன்றாகும். மக்களின் நம்பிக்கையை பெற்று நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீா்கள். மக்கள் பணிக்காக உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நீங்கள் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற வேண்டும். மக்களுக்கான அரசாக இது செயல்பட, அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.