புதுச்சேரி

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா் நாராயணசாமி

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோா் புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

புதுவை மாநிலத்தில் கடந்த ஜன.16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், முதியோா்கள் உள்பட 11,461 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு புதன்கிழமை வந்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் ஆகியோா் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

மேலும், பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்திய அவா்கள், கரோனா நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்ட சுகாதாரத் துறையினருக்கு பாராட்டுத் தெரிவித்தனா். சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT