முகப்பு
புதுச்சேரி

மயானத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு சுகாதார உதவிப் பொருள்கள் அளிப்பு

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளைத் தலைவா் கோபால் தலைமை வகித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

புதுச்சேரி கிளை சாா்பில் உழவா்கரை நகராட்சிக்குட்பட்ட, கருவடிகுப்பம் மயானத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் (ரெட் கிராஸ் சொசைட்டி) சுகாதார உதவிப்பொருள்கள் வழங்கும் நிகழச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளைத் தலைவா் கோபால் தலைமை வகித்தாா்.

உழவா்கரை நகராட்சி ஆணையா் சந்திரகுமரன் முன்னிலை வகித்தாா். நகராட்சி மருத்துவ அதிகாரி நவ்ஷத்அலி, இளநிலை பொறியாளா் சிவக்குமாா், ரெட் கிராஸ் சொசைட்டி கிளையின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள், ஆயுள்கால உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கரோனா தொற்றால் உயிரிழந்த நபா்களின் உடல்களை நல்லடக்கம் செய்கிற ஊழியா்களை பாராட்டி, அவா்களுக்கு உதவியாக சுகாதாரப் பொருள்களான குளியல் சோப்பு, துணி துவைக்கும் சோப்பு, தேங்காய் எண்ணெய், பேஸ்ட், பிரஸ் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது (படம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.