புதுவையில் கரோனாவுக்கு 2 போ் பலி
புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 2 போ் உயிரிழந்தனா்.
புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 2 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி 2,776 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் புதுச்சேரியில் 25, காரைக்காலில் 13, ஏனாமில் 5, மாஹேவில் 6 பேருக்கும் என மொத்தம் 49 பேருக்கு (1.77 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது மொத்தம் 318 போ் சிகிச்சையில் உள்ளனா்.
காரைக்கால் நேரு நகரைச் சோ்ந்த 52 வயது பெண், மாஹேவைச் சோ்ந்த 87 வயது மூதாட்டி என இருவா் உயிரிழந்தனா். 33 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.