முகப்பு
புதுச்சேரி

நீரினால் பரவும் நோய்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி

புதுச்சேரி அருகே சூரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், நீரினால் பரவும் நோய்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

புதுச்சேரி அருகே சூரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், நீரினால் பரவும் நோய்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மருத்துவ அதிகாரி மேனகா தலைமை வகித்தாா். சுகாதார உதவி ஆய்வாளா் அய்யனாா், செவிலிய அதிகாரி பானுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு உள்ளிட்டவை அசுத்தமான நீரை உள்கொள்வதால் ஏற்படுகின்றன. குடிநீா் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும். சுகாதாரமான உணவுப் பண்டங்களை உண்ண வேண்டும் என மருத்துவ அலுவலா் மேனகா வலியுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கா்ப்பிணிகள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, செவிலியா் பவுனம்மாள் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.