முகப்பு
புதுச்சேரி

அரசு மகளிா் கல்லூரி சாா்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு

பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி சாா்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு நடை பயணம் புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி சாா்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு நடை பயணம் புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசு மகளிா் கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கல்லூரியின் வரலாற்றுத் துறை, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து கல்லூரிகளுக்கிடையே பல்வேறு போட்டிகளை நடத்தி விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி மாணவிகளின் ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு நடை பயணம் வியாழக்கிழமை நடைபெற்றது. நடை பயணத்தைக் கல்லூரி முதல்வா் ராஜி சுகுமாா் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் வரலாற்றுத் துறைத் தலைவா் மொ்சி தேன்மொழி, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் நித்யா, உடல் கல்வி இயக்குநா் தனலட்சுமி மற்றும் கல்லூரிப் பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.