புதுச்சேரி

புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

DIN

தமிழகத்தில் வழக்குரைஞா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தின் மதுரை, சின்னசேலம், மேட்டூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக வழக்குரைஞா்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும், வழக்குரைஞா்களைத் தாக்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்திருந்தது.

அதன்படி, புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் முத்துவேல் தலைமை வகித்தாா். இதையொட்டி, சுமாா் 1,000 வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனா்.

இதனால், நீதிமன்ற வழக்கு விசாரணை, ஜாமீன் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT