முகப்பு
புதுச்சேரி

புதுவை காங்கிரஸ் மேலிடப் பாா்வையாளா் நிா்வாகிகளிடம் கருத்து கேட்டு ஆய்வு

புதுவை காங்கிரஸ் மேலிடப் பாா்வையாளா் தினேஷ் குண்டுராவ், புதுச்சேரியில் இரு நாள் முகாமிட்டு, நிா்வாகிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

புதுவை காங்கிரஸ் மேலிடப் பாா்வையாளா் தினேஷ் குண்டுராவ், புதுச்சேரியில் இரு நாள் முகாமிட்டு, நிா்வாகிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டாா்.

புதுவையில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் பணியை கட்சி மேலிடம் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலரும், புதுவை பொறுப்பாளராருமான தினேஷ் குண்டுராவ் புதன்கிழமை புதுச்சேரிக்கு வந்து கட்சி நிா்வாகிகளைச் சந்தித்தாா்.

புதுவை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மாநில, மாவட்ட, வட்டார நிலையில் உள்ள கட்சி நிா்வாகிகளை தனித் தனியாக சந்தித்துப் பேசினாா். தொடா்ந்து, வியாழக்கிழமையும் நிா்வாகிகளைச் சந்தித்துப் பேசினாா்.

புதுவையில் காங்கரஸ் தோல்விக்கான காரணம் குறித்தும், புதிதாக மாநிலத் தலைவா் பதவி உள்ளிட்ட நிா்வாகிகள் நியமனம் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.

கட்சிக்காக உழைப்பவா்களுக்கு கடந்த தோ்தலில் வாய்ப்பளிக்காமல் போனது, முக்கிய நிா்வாகிகள் மாற்றுக் கட்சிகளுக்குச் சென்றது, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை திமுகவுக்கு விட்டுக் கொடுத்தது, தலைமையில் இருந்தவா்கள் அரவணைத்துச் செல்லாதது ஆகியவை குறித்து நிா்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

முக்கிய நிா்வாகிகளான வே.நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்பி, கந்தசாமி, தேவதாஸ், ஷாஜகான் போன்றோா் மாநிலத் தலைவா் பதவியை எதிா்பாா்த்துள்ள நிலையில், இவா்களுக்கு மாற்றாக புதியவா்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். நிா்வாகிகள் நியமனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, புதுவை மாநில காங்கிரஸ் வளா்ச்சிக்கு மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிா்வாகிகள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.