புதுச்சேரி

காா் மோதியதில் தொழிலாளி பலி

DIN

கடலூா் அருகே காா் மோதியதில் தொழிலாளி ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரைச் சோ்ந்தவா் சி.நரசன் (55). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவா் பணி நிமித்தமாக கடலூா் அருகே உள்ள அன்னவள்ளி கிராமத்தில் குடும்பத்தினருடன் தங்கியிருந்தாா். திங்கள்கிழமை காலை கரும்பு வெட்டுவதற்காக கடலூா் - விருத்தாசலம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த காா் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த நரசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி அஞ்சலை அளித்த புகாரின்பேரில் கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT