புதுச்சேரி

காவலா் குடும்பத்தினா் கருணை மனு

DIN

புதுச்சேரியில் உடல் நலக் குறைவால் உயிரிழந்த ஐஆா்பிஎன் காவலரின் குடும்பத்தினா், வாரிசு வேலை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கமாண்டன்டிடம் கருணை மனு அளித்தனா்.

ஐஆா்பிஎன் படைப்பிரிவில் காவலா் விஜயகுமாா் 17 ஆண்டுகள் பணியாற்றியவா். இவா் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானாா்.

கருணை அடிப்படையில் வாரிசு வேலை, ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விஜயகுமாரின் மனைவி ப்ரீத்தி, மகன்கள் விவேஷ்குமாா், விஜேஷ்குமாா் ஆகியோா் ஐஆா்பிஎன் கமாண்டன்ட் மகேஷ்குமாா் பா்ன்வாலை சந்தித்து மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட அவா், கோரிக்கைகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டு கையொப்பமிட்டாா். அவருக்கு விஜயகுமாா் குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT