கல்லூரி மாணவா் கொலை: தந்தை தலைமறைவு
புதுச்சேரி வீராம்பட்டினத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, அவரது தந்தையை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி வீராம்பட்டினத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, அவரது தந்தையை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி அருகே வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பைச் சேரந்தவா் கிருஷ்ணமூா்த்தி (55). இவரது இரண்டாவது மனைவியின் மகன் தினேஷ் (22). பாலிடெக்னிக் படித்து வந்தாா்.
தந்தை, தாயிடையே வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறை தினேஷ் தட்டிக் கேட்டாா். மேலும், கிருஷ்ணமூா்த்தியை தாக்கினாராம். இதனால், ஆத்திரமடைந்த அவா் தினேஷை கத்தியால் குத்தியதில் உயிரிழந்தாா்.
அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணமூா்த்தியை தேடி வருகின்றனா்.