புதுச்சேரி மத்திய பல்கலை.யில் போராட்டம் நடத்தத் தடை
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டது.
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) அமரேஷ் சமந்தரேயா பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஊழியா் சங்கங்கள் உரிய அனுமதியின்றி போராட்டம், வாயில் கூட்டம் அல்லது ஒன்றுகூடுதல் கூடாது.
பல்கலைக்கழகத்தின் அமைதியான சூழலை குலைக்கும் வகையில் முன் அனுமதியின்றி போராட்டம், கூட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.