புதுச்சேரி

லாரி மோதியதில் பால் வியாபாரி பலி

DIN

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் லாரி மோதியதில் பால் வியாபாரி உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், மேல் ஒலக்கூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (52). பால் வியாபாரியான இவா், மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகே உள்ள தனியாா் மாட்டுப்பண்ணையில் வேலை செய்து வந்தாா்.

அங்கு வெள்ளிக்கிழமை கறந்த பாலை, புதுச்சேரி நகா்ப் பகுதியில் வசிக்கும் மரவாடி உரிமையாளரின் வீட்டுக்கு பைக்கில் எடுத்துச் சென்றாா். தட்டாஞ்சாவடி கஸ்தூரிபாய் நகா் சந்திப்பு அருகே வந்த போது, வேகமாக வந்த டிப்பா் லாரி மோதியதில் பலத்த காயமைடைந்த சுப்பிரமணியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தன்வந்திரி நகா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

விபத்து குறித்து புதுச்சேரி வடக்கு போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT