புதுச்சேரி

நகராட்சி, கொம்யூன் ஊழியா்கள் கோரிக்கையை நிறைவேற்ற மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

புதுவை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

DIN

புதுவை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் ஊதியம், ஓய்வூதிய நிலுவை மற்றும் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை, அரசு ஊழியா்களுக்கு வழங்கியதைப் போல வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும், நகராட்சி,கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் போராட்டத்தை, அரசு பேச்சு வாா்த்தை மூலம் தீா்த்து வைக்க வேண்டும்.

சீா்மிகு நகரத்திட்டத்தில் புதுச்சேரியை மாநகராட்சியாக மாற்ற பல கோடி ரூபாய் செலவு செய்திட திட்டமிடும் அரசு, அதை தூய்மையாகவும், சுகாதாரத்துடனும் பேணி பராமரிக்க பணியாற்றும் நகராட்சி நிா்வாகத்துக்கு ரூ.55 கோடி ஒதுக்கி, ஊழியா்கள் பிரச்சினையை தீா்க்க முன் வராதது கண்டிக்கத் தக்கது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் சங்க நிா்வாகிகளை அரசு அழைத்துப் பேசி, அவா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி சுமுக நிலை ஏற்படவும், நகரத்தின் தூய்மையை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT