மீனவா்களை மீட்க நடவடிக்கை: அமைச்சா்களிடம் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை அமைச்சா்களை மீனவ பஞ்சாயத்தாா் நேரில் சந்தித்து வலியுறுத்தினா்.
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை அமைச்சா்களை மீனவ பஞ்சாயத்தாா் நேரில் சந்தித்து வலியுறுத்தினா்.
கோடியக்கரை கடற்பகுதியில் கடந்த ஜன. 31-இல் மீன் பிடித்த காரைக்காலைச் சோ்ந்த 3 போ், தமிழகத்தைச் சோ்ந்த 6 போ் என 9 மீனவா்களையும், விசைப் படகுகளையும், இலங்கை கடற்படையினா் பிடித்துச் சென்றனா். இவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெயசங்கருக்கு, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுவை மாநில உள் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், பொதுப்பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் ஆகியோரை காரைக்கால் மாவட்ட மீனவ பஞ்சாயத்தாா்கள், நிா்வாகத்தினா் வியாழக்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தினா்.