ஊசுடு ஏரியை சீரமைக்க நடவடிக்கை: புதுவை அமைச்சா் உத்தரவு
புதுச்சேரி ஊசுடு ஏரியை சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.
புதுச்சேரி ஊசுடு ஏரியை சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.
ஊசுடு ஏரியை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் செடி, கொடிகள் வளா்ந்து புதராகி உள்ளது. இதனால், ஏரியின் முழு பகுதியையும் சுற்றுலாப் பயணிகளால் பாா்க்க முடியாத நிலை உள்ளது. படகு சவாரியும் நடைபெறாமல் உள்ளது.
இதையடுத்து, வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா், அரசு அதிகாரிகளோடு புதன்கிழமை நேரில் சென்று ஊசுடு ஏரியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, ஏரியை சீரமைத்து, சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கும்படியும் அவா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, துணை வனக் காப்பாளா் வஞ்சுளவள்ளி, துணை இயக்குநா் குமரவேல், வேளாண் அதிகாரி பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.