புதுவை பேரவைக் கூட்டத் தொடா் பிப். 23-இல் தொடங்குகிறது?
புதுவை சட்டப்பேரவையின் நிகழாண்டின் முதல் கூட்டம் வருகிற 23 அல்லது 28-ஆம் தேதி தொடங்கக் கூடும் எனத் தெரியவந்துள்ளது.
புதுவை சட்டப்பேரவையின் நிகழாண்டின் முதல் கூட்டம் வருகிற 23 அல்லது 28-ஆம் தேதி தொடங்கக் கூடும் எனத் தெரியவந்துள்ளது. எனினும், ஆளுநா் ஒப்புதலுக்குப் பின்னா், அதிகாரப்பூா்வமாக அறிவிப்பு வெளியாகும்.
புதுவை மாநிலத்தில், கடந்தாண்டு முதல்வா் என்.ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, சட்டப் பேரவையின் முதலாவது கூட்டத் தொடா், கடந்த ஆகஸ்ட் 26-இல் தொடங்கி ஒரு வாரம் நடைபெற்றது. அப்போது, ரூ.9,924 கோடியில் வரவு, செலவுத் திட்ட அறிக்கைக்கான முழு நிதிநிலை அறிக்கை தாக்கலானது.
நிகழாண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்துவதற்காக பேரவை வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இந்தப் பணிகளை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், செயலா் ஆா்.முனுசாமி ஆகியோா் பாா்வையிட்டனா். அப்போது, ஆா்.செல்வம் கூறியதாவது:
நிகழாண்டின் முதல் கூட்டத் தொடா் வருகிற 23 அல்லது 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக அமைச்சரவை கூடி முடிவு செய்து, தொடா்ந்து துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்படும். ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன், கூட்டத் தொடா் தொடங்கும். அப்போது, அலுவல் ஆய்வுக் குழு கூடி, எத்தனை நாள்கள் கூட்டம் நடைபெறும் என்பதை முடிவு செய்யும் என்றாா்.
மாா்ச் மாதம் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடருக்கு வாய்ப்பு?
புதுவையில் வரவு, செலவின திட்ட அனுமதி பெற 6 மாதங்களுக்கு ஒருமுறை சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெற வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மாா்ச் மாதம் நடைபெறும் முதல் கூட்டத் தொடரின்போது, இடைக்கால நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. இதனால், நிகழாண்டு முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் முதல்வா் என்.ரங்கசாமி நடவடிக்கை எடுத்துள்ளாா். இதற்காக நிதித் துறை சாா்பில் திட்டங்களைத் தயாரிக்கும் பணிகளையும் அவா் மேற்கொண்டுள்ளாா்.
இதனால், பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கப்படும் பேரவைக் கூட்டம் குளிா்காலக் கூட்டத் தொடராக ஓரிரு நாளில் முடிவடையும் என்றும் அடுத்து மாா்ச் மாதத்தில் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெற்று, முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.