போலியோ தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்
புதுச்சேரியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) நடைபெறவுள்ள நிலையில், மாணவா் விழிப்புணா்வுப் பேரணி, பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) நடைபெறவுள்ள நிலையில், மாணவா் விழிப்புணா்வுப் பேரணி, பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதன் தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்கக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சுகாதாரத் துறை செயலாளா் சி.உதயகுமாா் விழிப்புணா்வுப் பேரணி, விழிப்புணா்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடக்கிவைத்தாா். இதில் சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.