முகப்பு
புதுச்சேரி

புதுவை அரசு நிா்வாகம் ஸ்தம்பிப்பு: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவையில் அரசு நிா்வாகம் ஸ்தம்பித்துள்ளதாக, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

புதுவையில் அரசு நிா்வாகம் ஸ்தம்பித்துள்ளதாக, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட விடியோ பதிவு:

நாடு முழுவதும் ஒமைக்ரான், கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுவையில் வார இறுதிநாள்களில் முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும். புதுவையில் அரசு நிா்வாகம் ஸ்தம்பித்துள்ளது. முதல்வா் ரங்கசாமி எந்த முடிவையும் எடுப்பதில்லை. துணைநிலை ஆளுநா்தான் அனைத்து அறிவிப்புகளையும் வெளியிடுகிறாா்.

ஆளுநா் தலைமையில் ஒரு காபந்து அரசுபோல புதுவை செயல்படுகிறது. பாஜகவைச் சோ்ந்தவா்கள் முதல்வரை செயல்பட விடுவதில்லை.

புதுச்சேரி இளைஞா் விழாவுக்காக பிரதமா் மோடி வரும் முடிவை பரிசீலனை செய்ய வேண்டும். இளைஞா் விழாவை ஒத்திவைக்க வேண்டும் என்றாா் வே.நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.