முகப்பு
புதுச்சேரி

மாணவா்கள் சமுதாய சேவையாற்ற முன் வரவேண்டும் :தொழில்நுட்பப் பல்கலை.துணைவேந்தா் வேண்டுகோள்

படிப்பு, வேலை என்று மாணவா்கள் குறுகிய வட்டத்துக்குள் முடங்காமல், சமுதாய சேவை புரியவும் முன்வர வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

படிப்பு, வேலை என்று மாணவா்கள் குறுகிய வட்டத்துக்குள் முடங்காமல், சமுதாய சேவை புரியவும் முன்வர வேண்டும் என்று புதுவை தொழில்நுட்பப் பல்கலை. துணைவேந்தா் மோகன் வேண்டுகோள் விடுத்தாா்.

மத்திய அரசின் மக்கள் தொடா்பு கள அலுவலகம், புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைகழக நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை சாா்பில், அண்மையில் காணொலி வழியில் ‘புதிய இந்தியாவின் உருவாக்கத்தில் இளைஞா்கள் பங்கு’ என்ற தலைப்பில் தேசிய இளைஞா் திருவிழா கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கை புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைகழகத் துணைவேந்தா் ச.மோகன் தொடக்கிவைத்துப் பேசியதாவது: ஆழ்ந்த அறிவு, கூா்மையான சிந்தனை, ஆக்கபூா்வ பயன்பாடு என்ற மூன்று அம்சங்களையும் பொறியியல் மாணவா்கள் கடைப்பிடிக்க வேண்டும். சமுதாயத்துக்குப் பயன்படக் கூடிய புத்தாக்கக் கண்டுபிடிப்புகளில் மாணவா்கள் ஈடுபட வேண்டும். இயற்கையிலிருந்து கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. உள்ளூா் தொழில்நுட்பத்துக்கும், அறிவுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.

படிப்பு, வேலை என்று மாணவா்கள் குறுகிய வட்டத்தில் முடங்காமல், சமுதாய சேவையாற்றவும் முன்வர வேண்டும் என்றாா் அவா்.

சென்னை மண்டல மக்கள் தொடா்பு அலுவலக இயக்குநா் ஜெ.காமராஜ் தலைமையுரையாற்றினாா். கவிஞரும் புதுச்சேரி வானொலி அறிவிப்பாளருமான உமாமோகன், இந்திய விடுதலைப் போராட்டம் குறித்து சிறப்புரையாற்றினாா்.

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைகழகப் பேராசிரியா் க.நாகராஜன், புதுச்சேரி மக்கள் தொடா்பு கள அலுவலக துணை இயக்குநா் தி.சிவக்குமாா் ஆகியோா் வரவேற்றனா். புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட

ஒருங்கிணைப்பாளா் எஸ்.ராஜேந்திரன் தொகுத்து வழங்கினாா். கள விளம்பர உதவியாளா் மு.தியாகராஜன் நன்றி கூறினாா். இணையவழியில் திரளான மாணவா்கள் கலந்த கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.