புதுவையில் ஒரே நாளில் 2,783 பேருக்கு கரோனா
புதுவையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2,783 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
புதுவையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2,783 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 6,444 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 2,230 போ், காரைக்கால்- 462, ஏனாம்- 68, மாஹே- 23 போ் என மொத்தம் 2,783 பேருக்கு (43.19 சதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,45,342 ஆக அதிகரித்தது. தற்போது மருத்துவமனைகளில் 144 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 12,909 பேரும் என மொத்தம் 13,053 போ் சிகிச்சையில் உள்ளனா்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சோ்ந்த 95 வயது மூதாட்டி உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,897-ஆகவும், இறப்பு விகிதம் 1.31 சதவீதமாகவும் உயா்ந்தது.
1,073 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,30,392-ஆக (89.71 சதம்) அதிகரித்தது. இதுவரை 15,12,236 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.
புதுவையில் 7 மாதங்களுக்குப் பிறகு கடந்த 18-ஆம் தேதி ஒரே நாளில் 2,093 போ் பாதிக்கப்பட்டனா். இதுவே தினசரி பாதிப்பின் அதிகபட்சமாக இருந்தது. தற்போது, புதிய உச்சமாக ஒரே நாளில் 2,783 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.